உரை
1--10 மன்னவன்
அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங்கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால்
அழகிய நீண்டகூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும்
குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச
குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை
பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை
எடுத்துரைத்தும், பட்டவை
|