எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி.
இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது.
126--7. களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால்
உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு
இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து
எனக் கூறுதல் வேண்டா;
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவினை
யளிப்பது உழவுத்தொழிலாகலின், பிற சில தொழில்களையும் உழவாக உருவகப்படுத்தி,
வில்லேருழவர் சொல்லேருழவர் என்றிங்ஙனங் கூறுவர் சான்றோர் களவாகிய ஏரால்
உழுது வாழ்தலாவது களவினாற் பிறர் பொருளை வௌவி உண்டு வாழ்தலாம்: 1"கைப்பொருள்
வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்" என்றார் பிறரும். களவு செய்தோர்
கடுந்துயர் உறுதல் வெளிப்படையாகலின் ''இதுவென வேண்டா'' என்றாளென்க. இதனால்
களவின் தீமை கூறப்பட்டது.
128--9. மன்பே ருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில்
வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட
காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்;
130--41. கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே
மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில்
வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுவதும் உணர்ந்தோராவார், மல்லல் மா
ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்க் இல்லது நிரப்புநர் - வறுமைத்
துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண்
வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய
வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்
- பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம்
அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு
எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப்பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே
துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர்
நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார்
ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின்
செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ
ஆயிழை அவிப்ப - புதல்வ
1 பெரும்பாண்.
40-1.
|