105
110
115
120
125
130
135
|
பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார
இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்
பேதைமை செய்கை யுணர்வே யருவுரு
வாயி லூறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீ ராறும்
பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர
அறியா ராயி னாழ்நர கறிகுவர்
பேதைமை யென்ப தியாதென வினவின்
ஓதிய விவற்றை யுணராது மயங்கி
இயற்படு பொருளாற் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்
உலக மூன்றினு முயிரா முலகம்
அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்
மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந்
தொக்க விலகும் பேயு மென்றே
நல்வினை தீவினை யென்றிரு வகையால
சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி
வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும்
தீவினை யென்ப தியாதென வினவின்
ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய்
கொலையே களவே காமத் தவிழைவு
உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று
உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப்
பத்து வகையாற் பயன்றெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவ ராயின்
விலங்கும் பேயு நரகரு மாகிக்
கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர்
நல்வினை யென்ப தியாதென வினவில்
சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச் |