140
145
150
155
160
165
170
|
சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத
தேவரு மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர
அரசன் றேவியொ டாயிழை நல்லீர்
புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ
பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்
கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும்
முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து
நன்றறி மாதவ னல்லடி வணங்கித்
தேவியு மாயமுஞ் சித்திரா பதியும்
மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின்
இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின்
மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர்
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள்
மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி
வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்
கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல்
எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா
மனக்கினி யீரென் றவரையும் வணங்கி
வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை யாயிழை போகி
உலக வறவியு முதியாள் குடிகையும்
இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு
அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை
இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர்
பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து
ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி
இந்நகர்ப் போயா திந்நக ராளும்
மன்னவன் யாரென மாதவன் கூறும்
நாக புரமிது நன்னக ராள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
|