அரசமாதேவியே! கணிகையர் யாரினும்
யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ;
ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க.
கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய
வரலாற்றை எடுத்தியம்பி, 1
''மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்''
என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக்
காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன்.
முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள்
புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து
அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி.
19--26. பூவிலே
ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன்
என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற்
புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக்கூத்தி சென்று
ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும்
இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி
நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன்
மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு
நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும்
உண்டு ;
பூவிலை - பூவிற்கு விலை
; அற்றைப் பரிசம் என்பர் : 2
"பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர்
பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை;
அரங்கிலே கூத்தியற்றுதற்குரியவள் என்றபடி.
27--32.உம்பளம்
தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டு - உப்பளத்தின் மருங்குள்ள உயரிய நெடிய மணற்கரையினை
உடைய, பொங்கு திரை உலாவும் புன்னையங் கானல்-மிகுதியான அலைகள் உலாவுகின்ற
புன்னைமரச் சோலையின்கண், கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில்
இறுப்ப - ஒளிப்பொருந்திய மணிகளானாய பெரியமுடியினையுடையகிள்ளி இளவேனிற்பருவத்தில்
தங்குதலால் அவன் முன்னாக, இறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமில் ஒரு சிறை
- வியக்குந் தன்மை யமைந்த மலர்மணம் வீசும்
1
சிலப். 21 : 35. 2 சிலப்.
5 : 51.
|