46--47. காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்-காய்ந்த
குலைகளுடன் கூடிய பாக்கு மரமும் வாழை மரமும்
வஞ்சி
மரமும், பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
- மலர்
களையுடைய கொடியும் கரும்பும் என்னுமிவற்றை நடுவீர்
;
வஞ்சி - கொடியுமாம். கொடி வல்லி ஒரு பொருளன.
48--49. பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து-வலிசையாகவுள்ள
திண்ணைகளிலிருக்கும் பசும் பொன்னாலாகிய தூண்களில்,
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் - முத்துமாலைகளை
முறையாகத் தொங்க விடுமின் ;
தூணம் - தூண். பத்தியாகிய தூண் என்றலுமாம்.
முறையொடு-
முறையால்.
50--51. விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த
மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல்
மாற்றுமின்
புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின்
புதிய
மணலைப் பரப்புமின் ;
மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி
என்பர்.
52--53. கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை
மாடமும் வாயிலும் சேர்த்துமின்-துகிற் கொடிகளையும்
காம்பினால் ஊன்றப்படுங் கொடிகளையும்
கொடுங்கை
களையுடைய மாடங்களிலும் வாயில்களிலும் சேர்ப்பீராக
;
கதலிகைக்கொடி, விலோதம் என்பன துகிற்கொடி
வேறுபாடுகள்.
54--57. நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ்
சதுக்கத்துத் தெய்வம் ஈறாக-இமைத்தலில்லாத
நெற்றித் திருக்
கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில்
வாழ்கின்ற
சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு
சிறப்பின்
வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்
களோடு வெவ்வேறாகிய செய்வினைகளை, ஆறு அறி
மரபின்
அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை
அறிந்த முறைமை
யினையுடைய அறிவுடையோர் செய்ம்மின் ;