|
அறிந்திடின் ஒப்பற்ற பெரும்
பேற்றினை யறிவர், அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் - அவற்றை அறியாரானால்
துன்பம் நிறைந்த நிரயத்தினை யறிவர்;
பேதைமை-அவிச்சை, செய்கை
- கன்மம். உணர்வு - விஞ்ஞானம், அருவுரு - நாமரூபம். வாயில் - ஐம்பொறிகளும்
உள்ளமும். ஊறு- பொறிபுலன்களின் இயைபு. நுகர்வு-இன்பதுன்ப நுகர்ச்சி. வேட்கை-
அவா. பற்று - புலன்களைப் பற்றிக்கொள்ளுதல் - பவம் - கன்மவீட்டம் பயன்றரு
முறைப்படி சார்தல். தோற்றம் - கதிகளிற் பிறத்தல். வினைப் பயன் - கன்மபலம்.
இவற்றைப் பன்னிரு நிதானம் என்பர். இப் பன்னிரண்டின் இயல்புகளையும் இந்நூலின்
30ஆம் காதையால் அறிக. பெரும்பேறு - நிருவாணம் எனப்படும். நரகு அறிகுவர்
என்றது அதனில் அழுந்துவர் என்றபடி.
111--4. பேதைமை
என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால்,
ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி,
இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால்
தான் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல் - முயற்கொம்பு
உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்;
இவற்றை-இப் பன்னிரண்டினையும்.
கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது
மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க.
115--22. உலகம்
மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம்
அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர்
நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை
தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை
என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன்
விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய
பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்;
பௌத்தநூல் கூறும் உலகம்
முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் ''உலகம் மூன்றினும்''
என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள
விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத்
தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற்
|