வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும்
என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி -
உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து;
மாதவியையும் சுதமதியையும்
ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன
முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை
தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது.
156--68. வெந்து
ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல்
வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப்பொழுதில் மணிமேகலை அங்கு
நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி
கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற
ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப்
பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன்
மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித்தோன்ற லாகிய புண்ணியராசனது
பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
- ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன்
அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ்
செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின்
பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ;
அந்திப்பொழுதின் செக்கர்
வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; 1
"வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல்.
168-76. மாதவன்
கூறும்-அருந்தவனுரைப்பான், நாகபுரம் இது- இந்நகரத்தின் பெயர் நாகபுரம்,
நன்னகர் ஆள்வோன் - இந் நற்பதியை ஆள்வோன், பூமிசந்திரன் மகன் புன்னியராசன்
- பூமி சந்திரன் புதல்வனாகிய புண்ணியராசன் என்போன், ஈங்கு இவன் பிறந்த
அந்நாள்தொட்டு-இங்கு இவன் பிறந்த அந்நாள்தொடங்கி, ஓங்குயர் வானத்துப்
பெயல் பிழைப்பு அறியாது - மிகவுயர்ந்த விசும்பின் மழை பிழைத்தலை யறியாது,
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்-பூமியும் மரங்களும் பல வளங்களையும் அளிக்கும்,
உள்நின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்என-உயிர்கட்கு உள்ளே நின்று உருக்குகின்ற
பிணிகள் இல்லை என்று, தகை மலர்த்
1
அகம்: 71.
|