தாரோன் தன் திறம் கூறினன்
நகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன்தான் என்க-கட்டப்பட்ட மலர் மாலையினையுடைய
அரசனது வரலாற்றினை ஒளி பொருந்திய மலர்களையுடைய பூஞ்சோலையின்க ணிருந்த
பெருந்தவன் மொழிந்தனன்.
தகை - கட்டிய. அகை மலர் எனப் பிரித்து, மலர்ந்த மலர் என்றலுமாம்.
தொன்முது கணிகை கேட்டு வருந்தி வீழ்ந்து, "நகர் கலக்கொழி யாது; அஞ்சினேன்"
என்று ஏத்தி, "கணிகையை என்மனைத் தருக" என, இராசமாதேவி ஈங்கிவை சொல்வுழி,
மாதவி அறவணவடிகளுடன் வர, காண்டலும், எதிர் சென்று துணையடி வணங்க, அவன்
''அறிவுண்டாக'' என்று கூறலும், இராசமாதேவி காட்டி விளக்கிச் செய்தபின்,
''வாழ்க'' என, ''தேவி கேளாய்; நல்லீர் கேண்மின்; மணிமேகலை, முன்னுறக்
கூறுவல்'' என்று அவனெழுதலும், இளங்கொடி எழுந்துவணங்கி நின்று வணங்கிப் போகி
ஏத்தி வலங்கொண்டு சென்று இழிந்து பொறையுயிர்த்து வணங்கி, "யாது? யார்?"
என, மாதவன் கூறும்; அங்ஙனம் கூறும் அருந்தவன் கூறினன் என, வினை முடிவு செய்க.
ஆபுத்திரனாடு
அடைந்த காதை முற்றிற்று.
|