பக்கம் எண் :

பக்கம் எண் :362

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை

வந்து நின்னை ஈங்கு அழைத்து வந்தது நினக்கு முற்பிறப்பை உணர்த்தி, யாண்டும் நின் பெயரை நிலைநிறுத்துற் பொருட்டேயாகும். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே; இதனை யன்றி வேறு இல்லை," என்று சொல்லித்தேற்றினாள். அதனைக் கேட்ட அரசன், "எனது நாட்டிலும் பிறர்நாட்டிலும் நீ கூறிய நல்லறத்தைச் செய்வேன் : நீ என் பிறப்பை உணர்த்தினை, யான் நின்னிடத்தினின்றும் பிரிதல் ஆற்றேனாகின்றேன்," என, மணிமேகலை, "நீ வருந்தற்க :நீ இங்கே போந்ததற்கு வருந்தி நின்னாடுநின்னை யழைக்கும். ஆதலின் மரக்கலம் ஏறி நீ நின்னாட்டிற்குச் செல்லுக ; யான் வஞ்சி நகரத்திற்குச் செல்வேன்," என்று கூறி விசும்பில் எழுந்தான்.]





5





10






15





20

அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து
தரும சாவகன் றன்னடி வணங்கி
அறனு மறனும் அநித்தமு நித்தத்
திறனுந் துக்கமுஞ் செல்லுயிர்ப் புக்கிலும்
சார்பிற் றேற்றமுஞ் சார்பறுத் துய்தியும்

ஆரிய னமைதியு மமைவுறக் கேட்குப்
பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள்
கண்ணிணை யியக்கமுங் காமனோ டியங்கா
அங்கையிற் பாத்திரங் கொண்டறங் கேட்கும்
இங்கிணை யில்லாள் இவள்யா ரென்னக்

காவலற் றொழுது கஞ்சுக னுரைப்போன்
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்
யாவரு மில்லை யிவள்திற மெல்லாம்
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக்
கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்

காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்
மாதவ னறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்
கோதின னென்றியா னன்றே யுரைத்தேன்
ஆங்கவ ளிவளவ் வகனகர் நீங்கி
ஈங்கு வந்தன ளென்றலு மிளங்கொடி

நின்கைப் பாத்திர மென்கைப் புகுந்தது
மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய்
அப்பிறப் பறிந்திலை மாயினு மாவயிற்