பக்கம் எண் :

பக்கம் எண் :365

Manimegalai-Book Content
25.ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை


95





100





105





110





115





120





125



தேத மின்றா யின்று விளைந்தது
மணிமே கலைதான் காரண மாகவென்

றணிமணி நீண்முடி யரசன் கூற
மனம்வே றாயினன் மன்னென மந்திரி
சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி
எங்கோ வாழி யென்சொற் கேண்மதி
நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள்

பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு
மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்
கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித்
தான்றனி தின்னுந் தகைமைய தாயது
காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென

நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது
ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா
நீயொழி காலை நின்னா டெல்லாம்

தாயொழி குழவி போலக் கூஉம்
துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே

தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு
மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால்
மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த

தணியா வேட்கை தணித்தற் கரிதால்
அரசு முரிமையு மகநகர்ச் சுற்றமும்
ஒருமதி யெல்லை காத்தனின் கடனெனக்
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்
இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்திl

வங்க மேறினன் மணிபல் லவத்திடைத்
தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும்
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி