130
135
140
145
150
155
160
|
அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக
காவலன் றன்னொடுங் கடற்றிரை யுலாவும்
தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து
பெருமகன் காணாய் பிறப்புணர் விக்குக்
தரும பீடிகை யிதுவெனக் காட்ட
வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை யுயர்மணிப் பீடிகை
கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை
மையறு மண்டிலம் போலக் காட்ட
என்பிறப் பறிந்தே ணென்னிடர் தீர்ந்தேன்
தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்
ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு
இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு
அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
ஏடா வழிய லெழுந்திது கொள்கென
அமுத சுரபி யங்கையிற் றந்தென்
பவமறு வித்த வானோர் பாவாய்
உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும்
அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி
தேவ ராயினும் பிரம ராயினும்
நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி
பிறந்த பிறவிகள பேணுத லல்லது
மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி
மன்னவன் மணிமே கலையுட னெழுந்து
தென்மேற் காகச் சென்று திரையுலாங்
கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர்
தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப
ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது
காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி
அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு
பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை
அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர்
பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி
|