பக்கம் எண் :

பக்கம் எண் :366

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை


130





135





140





145





150





155





160



அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக
காவலன் றன்னொடுங் கடற்றிரை யுலாவும்

தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து
பெருமகன் காணாய் பிறப்புணர் விக்குக்
தரும பீடிகை யிதுவெனக் காட்ட
வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை யுயர்மணிப் பீடிகை

கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை
மையறு மண்டிலம் போலக் காட்ட
என்பிறப் பறிந்தே ணென்னிடர் தீர்ந்தேன்
தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்

ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு
இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு
அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
ஏடா வழிய லெழுந்திது கொள்கென

அமுத சுரபி யங்கையிற் றந்தென்
பவமறு வித்த வானோர் பாவாய்
உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும்
அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி
தேவ ராயினும் பிரம ராயினும்

நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி
பிறந்த பிறவிகள பேணுத லல்லது
மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி
மன்னவன் மணிமே கலையுட னெழுந்து
தென்மேற் காகச் சென்று திரையுலாங்

கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர்
தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப
ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது
காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி
அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு

பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை
அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர்
பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி