165
170
175
180
185
190
195
|
நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர
ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண்
ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர்
ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண்
ஊர்திரை தொகுத்த வுயர்மணல் புதைப்ப
ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால்
அன்புடை யாருயி ரரசற் கருளிய
என்புடை யாக்கை யிருந்தது காணாய்
நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப்
பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய்
கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை
பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய
மடவரல் நல்லாய் நின்றன மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்
நாக நன்னா டாள்வோன் றன்மகள்
பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய
புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்
தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக்
கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப
அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து
கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைக்
தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக்
கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள்
இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப
மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன்
நன்மணி யிழந்த நாகம் போன்று
கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி
வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது
|