பக்கம் எண் :

பக்கம் எண் :368

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை




200




205





210





215





220





225





230


மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள
அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்ட தி துவால்

கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேற் றடக்கை வானவன் போல
விரிதிரை வந்து வியனகர் விழுங்க
ஒருதனி போயின னுலக மன்னவன்
அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும்

வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர்
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள்
உரைத்தன கேட்க வுருகுவை யாயினின்
மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம்
முன்னா ளெடுத்தது மந்நா ளாங்கவன்

அறவர சாண்டது மறவணன் தன்பால்
மறுபிறம் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று
அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின்
மன்னவ னிரங்கி மணிமே கலையுடன்
துன்னிய தூமண லகழத் தோன்றி

ஊன்பிணி யவிழவு முடலென் பொடுங்கித்
தான்பிணி யவிழாத் தகைமையை தாகி
வெண்சுதை வேய்ந்தவ ணிருக்கையி னிருந்த
பண்புகொள் யாக்கையின் படிவ நோக்கி
மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து

என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய்
நின்னா டடைந்தியான் நின்னையீங் கழைத்தது
மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி
அந்தரத் தீ்வினு மகன்பெருந் தீவினும்
நின்பெயர் நிறுத்த நீணில மாளும்

அரசர் தாமே யருளறம் பூண்டால்
பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு
அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியு முடையு முறையுளு மல்லது

கண்ட தில்லெனக் காவல னுரைக்கும்
என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்