பக்கம் எண் :

பக்கம் எண் :369

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை



235







நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன
என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை
நீன்றிறம் நீங்க லாற்றேன் யானெனப்

புன்கண் கொள்ளனீ போந்ததற் கிரங்கிநின்
மன்பெரு நாடு வாயெடுத் தழைக்கும்
வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று
அந்தரத் தெழுந்தன ளணியிழை தானென்.

உரை

1--6 அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து - மன்னவன் மனைவியுடன் அச் சோலையின்கட் புக்கு, தருமசாவகன் தன்னடி வணங்கி-தருமசாவக முனிவரின் திருவடிகளைவணக்கஞ் செய்து, அறனும் மறனும் அநித்தமும் நித்தத்திறனும் துக்கமும் செல்லுயிர்ப்புக்கிலும்-அறமும் பாவமும் அநித்தப்பொருளின் வகைகளும் நித்தப்பொருளின் வகைகளும் பிறப்புமுதலாய துக்கமும் செல்லுகின்ற வுயிர்
புகுமிடமும், சார்பிற்றோற்றமும்சார்பு அறுத்துஉய்தி் - பேதைமை முதலிய பன்னிரண்டின் தோற்றமும் அவற்றினீங்கி உய்யும் வகையும், ஆரியன் அமைதியுப் அமைவுறக் கேட்டு- ஆசிரியனாகிய புத்தனின் இயல்பும் அமைதிபெறக் கேட்டு;
 
அரசன் - புண்ணிய ராசன். தரும சாவகன் என்பது தருமங் கேட்பவன் என்னும் பொருளது. துக்கம் - பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடு என்பன. சார்பிற்றோற்றம் - ஒன்றினொன்று சார்ந்து தோன்றும் பன்னிரு நிதானம். ஆரியன் - குரவன் ; புத்தன். அரசன் புகுந்து வணங்கிக் கேட்டு என்க.

7--10. பெண் இணை இல்லாப் பெருவனப்பு உற்றாள் - மகளிருள் தனக்கு இணையில்லாத பேரழகுடையளாய், கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா - கண்களின் இயங்குதலும் அநங்கனோடு இயங்கா நின்று, அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்- அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக்கொண்டு அறவுரை கேட்கின்ற, இங்கிணை இல்லாள் இவள் யார் என்ன - இணையற்ற இம் மங்கை
யாவள் என வினவ ;

கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா என்றது இதனைக் கருவியாகக்கொண்டு காமன் போருக்கெழுமாறு இவள் பார்வையின் இயக்கம் உளதென்றபடி: "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" (5: 6) என முன் வந்திருப்பதனோடு ஒத்து நோக்கற்பாலது. இனி, இயங்கா என முற்றாக்கி இயக்கம் தீநெறியிற் சென்றிலது என்றுமாம். அரசன் கேட்டுப் பின்பு இவள் யாரென்ன வென்க. .

11--8 காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் - அரசனைப் பணிந்து சட்டையிட்ட பிரதானி உரைக்கின்றவன், காவலந்தீவில்