ஆங்கவள் இவள்
அவ் அகல் நகர் நீங்கி-அவள் இந்நங்கையே அவ் வகன்ற்தினின்றும் நீங்கி,
ஈங்கு வந்தனள் என்றலும்- ஈண்டு வந்திருக்கின்றனள் என வுரைத்தலும், இளங்கொடி-மணிமேகலை,
நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது - நினது கையிலிருந்த அமுதசுரபியே என்
கையில் வந்தடைந்தது, மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் - மிகப் பெருஞ்
செல்வத்தால் மயங்கினையாகலின் நீ அதனை அறியாய், அப் பிறப்பு அறிந்திலை
ஆயினும்-நினது முற்பிறப்பினை அறிந்திலாயேனும், ஆ வயிற்று இப்பிறப்பு அறிந்திலை
என் செய்தனையோ - பசுவின் வயிற்றிலுதித்த இப் பிறப்பினையும் அறிந்திலையே
என் செய்தனை ;
உரைப்போனாகிய
கஞ்சுகன் ''ஈங்கு வந்தனள்'' என்றலும் என்க. அப் பிறப்பு - முற்பிறப்பு; சாலி
வயிற்றிற் பிறந்த பிறப்பு.
மணிப்பல்லவம் வலங்கொண்டால்
அல்லது - மணிபல்லவத் தின்கட் சென்று புத்த பீடிகையை வலம் வந்தாலன்றி, பிணிப்புறு
பிறவியின் பெற்றியை அறியாய்-பற்றுக்களையுடைய பிறவியினது தன்மையை அறியாய்
ஆகலின், ஆங்கு வருவாய் அரச நீ என்று-அரசனே நீ ஆண்டு வருவாயாக என்று, அப்
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று - மணங்கமழும் மாலையினையுடைய அம் மன்னவன்
முன்னர்க் கூறி, மையறு விசும்பின் மடக்கொடி எழுந்து - இளங்கொடி களங்கமற்ற
வானூடு எழுந்து ;
பிணிப்பு - பற்று, கட்டு. கமழ் பூந்தாரோன் என்க
30--6.
வெய்யன் குடபால்
வீழா முன்னர் - கதிரவன் மேற்றிசையிற் சென்று வீழ்வதன் முன்னம், வானின்று
இழிந்து-விசும்பினின்