பக்கம் எண் :

பக்கம் எண் :371

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 
றும் இறங்கி, மறி திரை உலாவும்-வளைந்த அலைகள் உலாவுகின்ற, பூநாறு அடைகரை எங்கணும் போகி - பூக்கள் மணம் வீசுகின்ற அடைகையெங்குஞ் சென்று, மணிப்பல்லவம் வலங்கொண்டு - மணிப்பல்லவத்தை வலம் வந்து, மடக்கொடி பிண்ப்பறு மாதவன் பீடிகை காண்டலும் - மணிமேகலை பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையைக் காண்டலும், தொழுது வலங்கொள்ள - வலம் வந்து வணங்க, அத் தூமணிப் பீடிகை-அவ் வழகிய தூய பீடிகையின், பழுது இல் காட்சி - குற்றமற்ற காட்சியானது, தன் பிறப்பு உணர்த்த - தனது பிறப்பினை அறிவிக்க;

அடைகரை - அணைந்துள்ள கரை. மடக்கொடி எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு காண்டலும், பீடிகைக் காட்சி உணர்த்த வென்க.

37--44.    காயங் கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள, மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து, வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன் அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்- விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும். கலங்கு அஞர்த் தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின் - ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின் ;

புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும், மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும் 1 "அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரு நரகரும், தொக்க விலங்கும பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு வகையாற், சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன.

45--51    புலவன் முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்-பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்று உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்யக் கொள்ளுமாறு உதித்தருள்வன், அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது-அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரை,


1 மணி. 30: 56-60.