என்றே - மன்னவனே நீ மாறுபட்ட
சிந்தனையைக் கடைப்பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக்
கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு;
துயர் நிலை யுலகம் என்புழி
உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்;
1
"உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல்
ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும்
இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த
மொழி.
120--3.
மணிபல்லவம்
வலங்கொள்வதற்கு எழுந்த-மணி பல்லவத்தினை யடைந்து வலம் வந்து வணங்குவேன்
என்றெழுந்த, தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்-நீங்காத விருப்பமானது தணித்திட
அரியதாகும் ஆகலின், அரசும் உரிமையும் அகநகர்ச்சுற்றமும் - அரசாட்சியையும்
உரிமையையும் அகநகரிலுள்ள பரிசனங்களையும், ஒருமதி எல்லை காத்தல் நின்
கடன் என - ஒரு திங்கள் அளவுங் காத்தல் நின்னுடைய கடமையாகும் என மொழிந்து;
உரிமை - அந்தப்புர மகளிர்.
அகநகர்ச் சுற்றம் - அகப் பரிவாரம். முதலிய பரிசனங்கள்.
124--7.
கலஞ்செய்
கம்மியர் வருகெனக் கூஉய்-மரக்கலத் தொழிலாளரை வருக என அழைத்துக்கொண்டு.
இலங்கு நீர்ப் புணரி எறிகரை எய்தி - விளங்குகின்றி நீரினையுடைய கடல்
அலைவீசுகின்ற கரையை அடைந்து, வங்கம் ஏறினன் - மரக்கலத்தின்கண் ஏறினன்,
மணிபல்லவத்திடைத் தங்காது அக்கலம் சென்று சார்ந்து இறுத்தலும்-அம் மரக்கலம்
இடையே தங்காமற் சென்று மணிபல்லவத்தை அடைந்து தங்குதலும்;
கலம் செய் கம்மியர் -
மரக்கல் மியற்றுந் தொழிலாளர்; மரக்கலத்தின் உறுப்புகள் சிதைவுழி அவற்றைச்
செம்மை செய்தற்கு அவரையும் உடன்கொண்டு செல்வர்.
128--33.
புரைதீர்
காட்சிப் பூங்கொடி பொருந்தி-குற்றமற்ற மெய்யறிவினையுடைய மணிமேகலை ஆண்டு
எய்தி, அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி - புண்ணியராசனது மரக்கலம்
என்று அறிந்து உளமகிழ்ச்சியுற்று, காவலன் தன்னொடும் கடற்றிரை உலாவும்
தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து - அரசனுடன் கடலில் அலைகள் உலாவுகின்றனே்
பொருந்திய மலர்ப்பொழிலையுடைய மணிபல்லவத்தை வலங்கொண்டு, பெருமகன் காணாய்
பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது எனக் காட்ட - அரச! முற்பிறப்பினை
யறிவிக்கும் அறத்தவிசு ஈது காண்பாயாக என்று காட்ட;
|