காவலன் றன்னொடும் வலஞ்செய்து
பீடிகையைக்காட்ட வென்க. வலங்கொண்டு ஏத்தினன்
134--7. மன்னவன் - வேந்தன் அப்பீடிகையை
வலம்வந்து துதித்தனன், மன்னவற்கு உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை - உயரிய
மணிகளானிழைக்கப்பட்ட அவ்வறத்தவிசு அரசனுக்குச் சென்று பிறப்பின்கண் நிகழ்ந்த
செய்தியை, கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக்
காட்ட-கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாக்க் காண்பிக்கும்
குற்றமற்ற கண்ணாடியைப்போல எடுத்துக்காட்ட;
பீடிகை உலந்த பிறவியை மண்டிலம்போலக் காட்டவென்க.
138--57.
என்
பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன்
னது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
- தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய்
பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே,
ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
- செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும்
உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன்
கையில் - உண்பதற்குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில்,
நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென
- ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது
ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில்
தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற்
பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை
அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்-
அறிவின்கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ்
அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய
தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு
கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப்
போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
- யான் பிறக்கின்ற பிறவிகள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து
வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து,
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும்
எழுந்து, தென்மேற்காகச் சென்று-
|