பக்கம் எண் :

பக்கம் எண் :380

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 

செல்க என்று கொடுத்தலும், பெற்ற உவகைநன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே - மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில், இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில் அவ் வங்கங் கவிழ்ந்தது;

கம்பளச் செட்டி, பெயர்; கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம். அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான் என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம்.

192--200.    கெடுகல மாக்கள் - அழிந்த மாக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன் புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று - நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும் தேர்வுழி -கடற் கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து, வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப்பூம்பட்டினம் இந்திரவிழா வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம் அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர்தன்னை அலைகடல் கொள்கென இட்டனள் சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள், பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்;

1 ''நன்மணி இழந்த நாகம்போன்று'' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக.

201--8.    கடவுள்மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல-பெருமை-பொருந்திய தனது தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழிங்க - விரிகின்ற அலைகளையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழிங்க, ஒருதனி போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச்


1 மணி. 7: 131.