பக்கம் எண் :

பக்கம் எண் :382

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 
வடிவத்தைப் பார்த்து, மன்னவன் மயங்க - புண்ணிய ராசன் கலக்க மெய்த;

தூ - தூய்மை. பிணி - கட்டு. தோன்றித் தகைமயதாகி இருந்த யாக்கையின் படிவமென்க.

220--31.    மணிமேகலை எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய் - விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினையுடைய மன்னவனேநீ என்ன துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான் நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறுபிறப்பு உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத் தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்துவதற்கே யாகும், நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப்படுவது யாது என்று கேட்பின் யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலைபெற்ற உயிர்கட்கெல்லாம் உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று கூற;

மறுபிறப்பு என்றது, ஈண்டுச் சென்ற பிறப்பினை. அந்தரத்தீவு பெருந் தீவு என்பவற்றை முன் 1 "நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம் பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந் தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்பெடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின் என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க. 2; "அற்றார்கட்கு, உண்டியுறையு ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது.

231--9.    காவலன் உரைக்கும் - அரசன் கூறுவான், என் நாட்டாயினும் பிறர் நாட்டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன் - நன்னுதால் என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாடுகளிலும் நீ மொழிந்த நல்லறங்களைச் செய்வேன், என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை - என் பழம் பிறப்பினை அறிவித்து அறிவுடையவனாக்கினமையின் நீ என்னைப் படைத்தோயாவை, நின்றிறம் நீங்கல் ஆற்றேன் யான் என - ஆகலின் யான் நின்னிடத்தினின்றும


1 மணி. 4 : 195 - 4.2 ஏலாதி. 9.