மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; 1
''''இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'''' என்பது காண்க.
உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந்
தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு 2
''''கடிபொழி லுடுத்த கலிங்கநன் னுாட்டு, வடிவேற் றடக்கை
வசுவுங் குமரனும்...வழுவில் சாபம்பட்டனிர்'''' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும்
நன்கறியப்படும்.
35-53. மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம்
- முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம்.
அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின்
முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது,
உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து-உம்பருலகினில்
நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின்கண்ணும்
இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப்போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற்கரிய
பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும்
மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும்
மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல்
வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய
பெருமையையுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று
நிறைத்து-அளத்தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்தஞாயிறு
தோன்றி-அசைவற்ற புத்தினாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி
- அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து
- தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித்
தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை
எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன்னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென
இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக்கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும்
''வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும்
காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது;
விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க. அடு சினப் பாவம்-மதுரையை
அழித்த சினமாகிய பாவம்; 3 ''''தன்னையே
1
சீவக. 1833. 27. 2 சிலப்.
23 : 3 குறள். 305:
|