திறல் - வலி; வெய்யோன் - விரும்பினோன் ; 1
''''வெற்றி விறல் வெய்யோன்'''' என்றார் புறப்பொருள்
வெண்பாமாலையினும்.
92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப்
பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும்
புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில்
மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான்
பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள்,
என்க.
கொடி, வஞ்சிக்கொடி; 2
''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர்
மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும்,
கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப்
பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும்
3 மேல் விளக்கப்பட்டன.
இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை''
எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு
(92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப்
பொலிந்தனள்'' என்பது.
அணியிழை எழுந்து புகுந்து
நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்;
அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும்,
மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள்
என்று, வினைமுடிக்க.
வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.
________
மணிமேகலை பதிகமுதல் இக்காதை வரை ஆசிரியர், நாவலர்
பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களெழுதிய
உரை முற்றிற்று.
1
புறப் - வெ. 68. 2 மணி.
28 ; 101-2. 3 மணி.
2 : 4-7 : 26 : 48.
|