பக்கம் எண் :

பக்கம் எண் :397

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை



25





30





35





40





45





50





55
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
கருத்தள வாவது

1 குறிக்கொ ளனுமா னத்தனு மேயத்
தகைமை யுணருந் தன்மைய தாகும்
மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்
பொதுவெனப் படுவது சாதன சாத்தியம்
இவையந் நுவய மின்றா யிருந்துங்

கடந்திகழ் யானைக் கானவொலி கேட்டோன்
உடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல்
எச்ச மென்பது வெள்ளவே துவினால்
நிச்சயித் தத்தலை மழைநிகழ் வுரைத்தல்
முதலென மொழிவது கருங்கொண் முகில்கண்
டிதுமழை பெய்யு மெனவியம் பிடுதல்
என்னு மேதுவி னொன்றுமுக் காலந்
தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி
மாண்ட வுயிர்முதன் மாசின் றாகிக்
காண்டற் பொருளாற் கண்டில துணர்தல

உவம மாவ தொப்புமை யளவை
கவய மாவாப் போலுமெனக் கருதல்
ஆகம வளவை யறிய னூலாற்
போக புவன முண்டெனப் புலங்கொளல்
அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை

இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல்
2 இயல்பி யானைமே லிருந்தோன் தோட்டிக்கு
அயலொன் றீயா ததுவே கொடுத்தல்
ஐதிக மென்ப துலகுரை யிம்மரத்து
எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல்

அபாவ மென்ப தின்மையோர் பொருளைத்
தவாதவ் விடத்துத் தானிலை யென்றல்
மீட்சி யென்ப திராமன்வென் றானென
மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல்
உள்ளநெறி யென்பது நாராசத் திரிவிற்

1 குறிகொளனு மானத். 2 இயைபியானை.