90
95
100
105
110
115
120
|
இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்
துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்
பேருல கெல்லாம் பிரம வாதியோர்
தேவ னிட்ட முட்டை யென்றவனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன்
கற்பங் கைசந் தங்கா லெண்கண்
தெற்றெ னிருத்தஞ் செவிக் கைமூக்
குற்ற வியாகர ணமுகம் பெற்றுச்
சார்பிற் றோன்றா வாரண
1
வேதக்
காதி யந்த மில்லையது நெறியெனும்
வேதிய னுரையின் விதியுங் கேட்டு
மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற
எத்திறத் தினுமிசை யாதிவ ருரைதென
ஆசீ வகநூ லறிந்த
2
புராணனைப்
பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென
எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பி லறிவ னிறைநூற் பொருள்களைந்
துரந்தரு முயிரோ டொருநால் வகையணு
அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப்
பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும்
நிலநீர் தீக்காற் றென
3
நால்
வகையின
மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்
வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்
அவ்வகை யறிவ துயிரெனப் படுமே
வற்ப மாகி யுறுநிலந் தாழ்ந்து
|