பக்கம் எண் :

பக்கம் எண் :400

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை






125






130






135






140






145






150
சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய்
இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத்
தெறுதலு மேற்சே ரியல்பு முடைத்தாம்
காற்று விலங்கி யசைத்தல் கடனிவை
1 வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்

ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா
2 புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா
முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா
ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா

அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா
உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும்
குலாமலை பிறவாக் கூடும் 3 பலவும்
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்
மன்னிய வழிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்

வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோற் செழுநில 4 வரைப்பாம்
நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற்
குறைந்து மொத்துங் கூடா வரிசையின்
ஒன்று முக்கா லரைசா லா 5 யுறும்

துன்று 6 மிக் கதனாற் பெயர்சொலப் படுமே
இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச்
சிக்கென் பதுவும் நீரா யிழிவதும்
தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை யடைந்திட மாட்டா

ஓரணுத் தெய்வக் கண்ணோ ருணர்குவர்
7 தேரார் பூதத் திரட்சியு ளேனோர்
மாலைப் போதி லொரு 8 மயி ரறியார்
சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்புங் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்புஞ் செம்ம் பிறப்பும்

1 வேற்றியலெய்தும். 2 புத்தாய்ப். 3 மலையும். 4 வரைப்பால். 5 துன்றும். 6 மிக்க வதனிற். 7 நோலா பூதத்திரட்சி. 8 மயிரும்.