பக்கம் எண் :

பக்கம் எண் :450

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் புக்க காதை




65





70





75





80





85





90





95
சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும
வேணவா மிகுக்கும் விரைமரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து
நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும்

சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும்
கோலங் குயின்ற கொள்கை யிடங்களும்
கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு
அந்தர சாரிக ளமர்ந்தினி துறையும்
இந்திர விகார மெனவெழில் பெற்று

நவையறு நாத னல்லறம் பகர்வோர்
உறையும் பள்ளிபுக் கிறைவளை நல்லாள்
கோவலன் றாதை மாதவம் புரிந்தோன்
பாதம் பணிந்துதன் பாத்திர தானமும்
தானப் பாயத்தாற் சாவக மன்னவன்

ஊனமொன் றின்றி யுலகாள் செல்வமும்
செல்வற் கொணர்ந்தத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்டப் பிறப்பினை யுணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்ன ருயர்தெய்வந் தோன்றி
மனங்கவல் கெடுத்தது மாநகர் கடல்கொள

அறவண வடிகளுந் தாயரு மாங்குவிட்டு
இறவா திப்பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் றன்னா டெய்தத்
தீவகம் விட்டித் திருநகர் புகுந்ததும்
புக்கபி னந்தப் பொய்யுரு வுடனே

தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும்
அவ்வவர் சமயத் தறிபொரு ளெல்லாம்
செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும்
நாத னல்லறங் கேட்டலை விரும்பி
மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும்

சொல்லின ளாதலிற் றூயோய் நின்னையென்
நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுவெனத்
தையல் கேணின் றாதையுந் தாயும்
செய்ததீ வினையிற் செழுந்கர் கேடுறத்
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்