130
135
140
145
150
155
160
|
தொழுதவம் புரிந்தோன் சுகதற் கியற்றிய
வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம
ஈனோர்க் கெல்லா மிடர்கெட வியன்றது
கண்டுதொழு தேத்துங் காதலின் வந்தித
தண்டாக் காட்சி தவத்தோ ரருளிக
காவிர்ப் பட்டினங் கடல்கொளு மென்றவத
தூவுரை கேட்டுத் துணிந்திவ ணிருந்தது
இன்னுங் கேளாய் நன்னெறி மாதே
தீவினை யுருப்பச் சென்றநின் றாதையும
தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால
ஆங்கத் தீவினை யின்னுந் துய்த்துப
பூங்கொடி முன்னவன் போதியி னல்லறந
தாங்கிய தவத்தாற் றான்றவந் தாங்கிக
காதலி தன்னொடு கபிலையம் பதியில
நாத னல்லறங் கேட்டுவீ டெய்துமென்று
அற்புதக் கிளவி யறிந்தோர் கூறச
சொற்பய னுணர்ந்தேன் றோகை யானும
அந்நா ளாங்கவ னறனெறி கேட்குவன
நின்னது, தன்மையந் நெடுநிலைக் கந்திற் றுன்னிய
துவதிக னுரையிற் றுணிந்தனை யன்றோ
தவநெறி யறவணன் சாற்றக் கேட்டனன
ஆங்கவன் தானுநின் னறத்திற் கேதுப
பூங்கொடி கச்சி மாநக ராதலின
மற்றம் மாநகர் மாதவன் பெயர்நாள
பொற்றொடி தாயரு மப்பதிப் படர்ந்தனர
அன்னதை யன்றியு மணியிழை கேளாய
பொன்னெயிற் காஞ்சி நாடுகவி னழிந்து
மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலின
அந்நகர் மாதவர்க் கைய மிடுவோர
இன்மையி னிந்நக ரெய்தினர் காணாய
ஆருயிர் மருந்தே யந்நாட் டகவயின
காரெனத் தோன்றிக் காத்தனின் கடனென
அருந்தவ னருள வாயிழை வணங்கித
திருந்திய பாத்திரஞ் செங்கையி னேந்திக
|