200
205
210
215
220
225
230
|
அன்னா ளிந்த வகநகர் புகுந்த
பின்னா ணிகழும் பேரறம் பலவால்
கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது
பாரக விதியிற் பண்டையோ ரிழைத்த
கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்த தீங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத்
தெய்வதம் போயபிற் செய்தியா மமைத்தது
இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத்
தீவகம் போன்ற காவகம் பொருந்திக்
கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள்
பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டிய
அங்கப் பீடிகை யிதுவென வறவோன்
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத்
தீவ திலகையுந் திருமணி மேகலா
மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு
ஒத்த கோயி லுளத்தகப் புனைந்து
விழவுஞ் சிறப்பும் வேந்த னியற்றத்
தொழுதகை மாதர் தொழுதன ளேத்திப்
பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும்
அங்கையி னேந்திய வமுத சுரபியை
வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப்
பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின்
மொய்த்த மூவறு பாடை மாக்களில்
காணார் கேளார் கான்முட மானோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்
மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும்
பன்னூ ராயிரம் விலங்கின் றொகுதியும்
மன்னுயி ரடங்கலும் வந்தொருங் கீண்டி
அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
நீரு நிலமுங் காலமுங் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
|