பக்கம் எண் :

பக்கம் எண் :21

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 

கண்டு நிற்போரும் ஆகிய பல குழுவினரும் முன்பு விராடன் பேரூரில் பேடியுருக்கொண்டு சென்ற அருச்சுனனைச் சூழ்ந்த கம்பலை மாக்கள் போல் மணிமேகலையைச் சூழ்ந்துகொண்டு, ''இத்துணைப் பேரழகுடைய இவளைத் தவநெறிப்படுத்திய தாய் கொடியளாவள்; இவள் வனத்திற் செல்லின் ஆங்குள்ள அன்னப்பறவை முதலியன இவள் நடை முதலியவற்றைக் கண்டு என்ன துன்பமுறா'' என்று இவை போல்வன கூறி, அவளழகைப் பாராட்டி வருந்தி நின்றனர்; மணிமேகலை சுதமதியுடன் பலவகை மலர்களாலும் வித்தரியற்றிய சித்திரப்படாம் போர்த்தது போல் விளங்கிய உவவனத்தின்கண் மலர் கொய்யப் புகுந்தனள். (இதிற் கூறப்பட்டுள்ள களிமகன், பித்தன் என்போருடைய இயல்புகள் படித்து இன்புறற்பாலன. ஒரு நகர வீதியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகளை இடனறிந்து ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள திறம் பாராட்டற்குரியது.)]






5





10





15





20
வயந்த மாலைக்கு மாதவி யுரைத்த
உயங்குநோய் வருத்தத் துரைமுன் றோன்றி
மாமலர் நாற்றம் போன்மணி மேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின்
தந்தையும் தாயுந் தாநனி யுழந்த

வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை
மாதர் செங்கண் வரிவனப் பழித்துப்
புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட

மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும்

மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்
சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்
குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத்
தணியாத் துன்பந் தலைத்தலை எய்தும்
மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள்

அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய
கடைமணி யுகுநீர் கண்டன னாயிற்
படையிட்டு நடுங்குங் காமன் பாவையை