பக்கம் எண் :

பக்கம் எண் :488

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை



345





350





355





360





365





370





375


யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம்
ஆதலாற் காண்புற்றது பரமாணு விலெனில்
திட்டாந் தப்பர மாணு

நித்தத் தோடு மூர்த்த மாதலாற்
சாத்திய தன்ம நித்தத்துவ நிரம்பிச்
சாதன தன்மவமூர்த் தத்துவங் குறையுஞ்
சாத்திய தன்ம விகல மாவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திற்

சாத்திய தன்மங் குறைவு படுதல்
சத்த நித்த மமூர்த்த மாதலால்
யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம்
புத்தி போஒ லென்றால்
திட்டாந்த மாகக் காட்டப் பட்ட

புத்தி யமூர்த்த மாகி நின்றே
யநித்த மாதலாற் சாதன வமூர்த்தத்துவ
நிரம்பிச் சாத்திய நித்தத்துவங் குறையும்
உபய தன்ம விகல மாவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திலே

சாத்திய சாதன மிரண்டுங் குறைதல்
அன்றியு மதுதான் சன்னு மசன்னும்
என்றிரு வகையா மிவற்றுட்சன் னாவுள
உபய தன்ம விகல மாவது
உள்ள பொருட்கட் சாத்திய சாதனங்

கொள்ளு மிரண்டுங் குறையக் காட்டுதல்
சத்த நித்த மமூர்த்த மாதலான்
யாதொன்றி யாதொன் றமூர்த்தமது நித்தம்
கடம்போ லெனிற்றிட் டாந்த மாகக்
காட்டப் பட்டகடந் தானுண் டாகிச்

சாத்திய மாயுள நித்தத் துவமும்
சாதன மாயுள வமூர்த்தத்து வமுங்குறையும்
அசன்னா வுள்ள வுபயதன்ம விகலம்
இல்லாப் பொருட்கட் சாத்திய சாதனம்
என்னு மிரண்டுங் குறையக் காட்டுதல்

சத்த மநித்த மூர்த்த மாதலான்