பக்கம் எண் :

பக்கம் எண் :489

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை




380





385





390





395





400





405





410




யாதொன் றியாதொன்று மூர்த்தமத நித்தம்
ஆகாசம் போலெனுந் திட்டாந் தத்துச்
சாத்திய தன்மமா யுள்ள வநித்துமுஞ்
சாதன தன்மமா யுள்ள மூர்த்தமும்

இரண்டு மாகாச மசத்தென் பானுக்
கதன்க ணின்மை யானே குறையும்
உண்டென் பானுக் காகாச நித்தம்
அமூர்த்த மாதலர் லவனுக்குங் குறையும்
அநன்னுவய மாவது சாதன சாத்தியந்

தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே
இரண்ட னுடைய வுண்மையைக் காட்டுதல்
சத்த மநித்தங் கிருத்த மாதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம தநித்தமெனும்
அன்னுவயஞ் சொல்லாது குடத்தின் கண்ணே

கிருத்த வநித்தங் காணப் பட்ட
என்றா லன்னுவயந் தெரியா தாகும்
விபரீ தான் னுவயம் வியாபகத் துடைய
அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல்
சத்த மநித்தங் கிருத்தத் தாலெனின்

யாதொன்று யாதொன்று கிருத்த மநித்தமென
வியாப்பியத் தால்வியா பகத்தைக் கருதா
தியாதொன் றியாதொன் றநித்தமது கிருத்தமென
வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை

இன்றியு நிகழ்த லின்விப ரீதமாம்
வைதன்மீய திட்டாந் தத்துச்
சாத்தி யாவிளா விருத்தி யாவது
சாதன தன்ம மீண்டு
சாத்திய தன்ம மீளா தொழிதல்

சத்த நித்த மமூர்த்தத் தென்றால்
யாதொன் றியாதொன்று நித்தமு மன்றது
அமூர்த்தமு மன்று பரமாணுப் போலெனின்
அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட
பரமாணு நித்தமாய் மூர்த்த மாதலிற்