பக்கம் எண் :

பக்கம் எண் :24

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை




95





100





105





110





115





120





125

வந்தீ ரடிகணும் மலரடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ
அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா

திம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும்
தன்வயிற் றரூஉமென் தலைமக னுரைத்தது
கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின்
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன்

கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்
றுண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும்
கணவிரி மாலை கட்டிய திரணையன்
குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன்

சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்
வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப்
பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம்

தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும்
ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மைய லுற்ற மகன்பின் வருந்திக்
கையறு துன்பங் கண்டுநிற் குநரும்

சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்