பக்கம் எண் :

பக்கம் எண் :25

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 




130





135





140





145





150





155





வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய

கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும்
விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற்
பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி யப்பிய நெய்யணி முச்சி
மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ்

பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவவாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்

தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்

விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்

மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின்
நல்லிள வன்னம் நாணா தாங்குள
வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை
மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்

பைங்கிளி தாமுள பாவைதன கிளவிக்
கெஞ்சல கொல்லொ இசையுந வல்ல
என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச்
செந்தளிர்சி சேவடி நிலம்வடு வுறாமல்