பக்கம் எண் :

பக்கம் எண் :27

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  அவிழ் நறுமலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட -
கட்ட விழ்ந்து விளங்குகின்ற இதழ்களையுடைய நறிய மலர் மாலையின் மீது வீழ்த்தி அதனை நீராட்ட ;

இடும்பை-மாதவி கூறிய துன்ப மொழிகள், மாதர்-காதல் ; ஈண்டு அழகு. வரு-மையெழுதிய கீற்று; 1 "வரிவனப் புற்ற" என்பது புறம். புலம்புநீர்-தனித்து வீழ்கின்ற நீர்த் துளியுமாம். நீராட்ட - நனைக்க
என்றபடி.

11-17. மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரை மலர்
குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய சிவந்த கையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர் மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும், மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக் கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள் ;

மாதவி நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க.   போல - போலும்படி, தாமரை மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம் ; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது ; அழகுமாம். நிகர்-ஒளி ; 2 "நீர்வார் நிகர். மலர்" 3 “அரும்பவிழ் முல்லை, நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம்.

18-25. குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு-தாய் தந்தையர்க்கு நேர்ந்த கொடிய துன்பத்தினைக் கேட்டு, தணியாத் துன்பம் தலைத் தலை எய்தும்-ஆறாத் துயரினை மேன்மேல் அடையும், மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்-மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள், அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய-அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற, கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் - கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், படைஇட்டு நடுங்கும் காமன்-காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும்
 

1 புறம். 33.   2 அகம். 11.  3  சிலப் 9 ; 1-2