பக்கம் எண் :

பக்கம் எண் :548

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

  "யாதொன்று யாதொன்று அநித்தம் அன்று மூர்த்தமு மன்று - யாதொரு பொருள் அநித்தமல்லது அது மூர்த்தமல்லாதது என விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் - ஆகாசம் போலவென்று வைதன்மிய நெறி பற்றிய திட்டாந்தம் காட்டப்படுமானால்; ஆகாசம் பொருளல்ல வென்பானுக்கு-ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத வாதிக்கு; ஆகாசம் உண்மையின்மையினால் - ஆகாசம் உள் பொருளன்றாதலால்; சாத்திய வநித்தமும்-சாத்திய தன்மமான அநித்தத்துவமும்; சாதன மூர்த்தமும்-சாதன தன்மமான மூர்த்தத்துவமும்; மீட்சியும் மீளாமையும் இலையாகும் - மீண்டு நிற்றலும் மீளாதே நின்றியைதலும் இல்லையாய்க் குற்றமாம் எ - று.
 
       காட்டப்படும் திட்டாந்தம் பொருளாகக் கொள்ளப்படாவிடத்து அதன்பால் உளவென்றும் இலவென்றும் கூறற்குரிய தன்மங்களே யில்லையாய் ஒழிதலின், அத்தகைய பொருளைத் திட்டாந்தமாகக் காட்டுதல் குற்றமாம் ; ஆதலால் இஃது இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தக் போலியெனப் படுவதாயிற்று. உம்மை : இசைநிறை. அன்றென்பதை அநித்தத்துக்கும் கூட்டுக.
 
       இனி, நியாயப் பிரவேசமுடையாரைப் போலவே பிரசத்தபாதரும் இவ் வுபயாவியா விருத்தியை ஒன்றாகவே கொண்டு ஆகாசத்தையே திட்டாந்தமாகக் 1 காட்டுகின்றார்.

450--9.











அவ் வெதிரேகமாவது-அவ் வெதிரேகமென்னும் வைதன்மிய திட்டாந்தக் போலியாவது; சாத்தியமில்லாவிடத்து-சாத்திய தன்மம் இல்லாதவிடத்து; சாதனம் இன்மை சொல்லாதே விடுதலாகும் -சாதன தன்மம் இல்லையென்று எடுத்துச் சொல்லா தொழிவதாம்; சத்தம் நித்தம் பண்ணப்படாமையால் என்றால் - சத்தம் நித்தமாகும் பண்ணப்படுவதன்றாதலால் என்ற வழி; யாதொன்று யாதொன்று நித்தமன்று-யதொரு பொருள் நித்தமன்றோ; பண்ணப்படுவதல்லாததும் அன்று எனும்-பண்ணப்படாததன்று என்னும்; இவ் வெதிரேகம் தெரியச் சொல்லாது - இவ் வெதிரேகக் கூற்றை எதிரிக்குத் தோன்ற எடுத்துச் சொல்லாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டேமாதலால் - குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயப்படுந் தன்மையும் அநித்தத்துவமும் கண்டுள்ளேமாதலால்; என்னின்-என்று சொன்னால் ; வெதிரேகம் தெரியாது - குடத்தின்கண் சாத்திய தன்மமான நித்தியத்துவம் இல்லாமையால், பண்ணப்படாமையுமில்லை என்ற வெதிரேக வியாத்தி விளங்கத் தெரிவிக்கப்படாமையின் அவ் வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாயிற்று எ - று.

1 பிரசத்த பாடி. பக். 247.