பக்கம் எண் :

பக்கம் எண் :558

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை




140





145





150





155





160





165





170
இரண்டாங் கண்ட மாகு மென்ப
உணர்ச்சி யருவுரு வாயி லூறே
நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன
முன்னவற் றியல்பாற் றுன்னிய வாதலின்

மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக்
கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை
மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட்
குற்றமும் வினையு மாக லானே
நான்காங் கண்டம் பிறப்பே பிணியே

மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம்
எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற்
பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி
நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி

கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை
ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே
தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும்

உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும்
உணர்வு முருவு முடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங்
கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்

மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை

எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள்
குலவிய குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை