பக்கம் எண் :

பக்கம் எண் :559

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை






175





180





185





190





195





200



புனையுமடை பவமும் வினைசெய லாகும்
உணர்ச்சி யருவுரு வாயி லூறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை
நிகழ்ச்சிப்பய னாங்கே நேருங் காலைக்
குற்றமும் வினையும் பயனுந் துன்பம்

பெற்ற தோற்றப் பெற்றிக ணிலையா
எப்பொரு ளுக்கு மான்மா விலையென
இப்படி யுணரு மிவைவீட் டியல்பாம்
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே

அவல மரற்றுக் கவலைகை யாறென
நுவலப் படுவன நோயா கும்மே
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை யவாவே பற்றுக்
கரும வீட்டமிவை காரண மாகும்

துன்பந் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள வறிவிவை யைங்கந்த மாவன

அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பிற்
றொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந் துரை யென்ற நான்கினு மியைந்த
உண்மை வழக்கு மின்மை வழக்கும்
உள்ளது சார்ந்த வுண்மை வழக்கும்

இல்லது சார்ந்த வின்மை வழக்கும்
உள்ளது சார்ந்த வின்மை வழக்கும்
இல்லது சார்ந்த வுண்மை வழக்குமெனச்
சொல்லிய தொகைத்திற முடம்புநீர் நாடு
தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந்

நிகழ்ச்சியி லவற்றை நெல்லென வழங்குதல்
இயல்பு மிகுத்துரை யீறுடைத் தென்றுந்
தோன்றிற் றென்று மூத்த தென்றும்
மூன்றி னொன்றி னியல்புமிகுத் துரைத்தல்