ஆறு வழக்கு
முகம் எய்தி - மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம்
நிலவும் எ-று.
வாய்மை நான்காவன: துக்கம், துக்க நீக்கம் துக்கத் தோற்றம்,
துக்க நீக்க நெறியென்பன. ஐவகைக் கந்தமாவன; உருவம், வேதனை, குறிப்பு, பாவனை
விஞ்ஞான மென்பன. வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த
வுண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த வுண்மை வழக்கு,
இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப.
35--6.
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங்களாலும் நால்வகைப் பான்களை உற்று;
இயன்ற-இவற்றோடு ஒப்பிவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய்-நான்கு வகையான
வினாவடையுமுடாயதாய் இந்நிதானம் இயலும் எ-று.
நயங்கள் நான்காவன: ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை,
இயல்பு என்பன. பயன் நான்கினையும் "தொக்க பொருளல தொன்றில்லை யென்றும்,
அப்பொருளிடைப் பற்றாகாதென்றும், செய்வானோடு கோட்பாடில்லை யென்றும். எய்து
காரணத்தாங் காரியம் என்று மதுவு மன்று அலாதது மன்றென்றும், விதிமுறை தொகையினால்
விரிந்த" (30-229-34) என்று கூறுதலாலறிக. வினாவிடை நான்காவன; "வினாவிடை
நான்குள, துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விருத்தல், வாய்வாளாமையென"
(30. 285--37) என வருதல் காண்க.
37--44.நின்மிதி
இன்றி - நிருமிக்க்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது
- ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடுவதில்லையாய்;
பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்;
யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதொன்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும்
இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி
- பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும்
வீடும் இனை யனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும்
பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம்
தானே முதலாகியுமுள்ளன இந்நிதானங்கள் எ-று.
நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல்
- முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி
முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மதியின்றி" யென்பது முதலாக
விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும |