3.
மலர்வனம் புக்க காதை
|
|
னாயினேன் ; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை
ஆயினும்-அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண்
இமைக்கும் அள விலே என்னை இந்நகரில்விட்டு மறைந்து நீங்கினன் ;
|
தாரன்
மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன் என்றியைக்க. 1"தாரன்......படிமையன்,"
என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன்
பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம்.
|
42-43, |
மணிப்பூங் கொம்பர்
மணிமேகலைதான் - மாணிக்கப் பூங் கொம்பனைய மணிமேகலை, தனித்து அவர்கொய்யும்
தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் -
தகுதி வாய்ந்தவ ளல்லள் ;
|
நீங்கினன்
; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வதுண்டாகலினதனித் தலர் கொய்யுந் தகைமைய
ளல்லள் என விரித்துரைக்க.
|
44-46 |
பன்மலர் அடுக்கிய
நன்மரப் பந்தர் - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய, இலவந்திகையின்
எயிற்புறம் போகின் - இலவந்திகையின் மதிற்புறத்தே சென்றால், உலக மன்னவன்
உழையோர் ஆங்குளர் - சோழ மன்னனது மருங்கிலுள்ளோர்
ஆண்டுறைவர் ;
|
மரப்
பந்தர் - மரங்களாகிய பந்தர் என்றும், சோலை என்றுமாம்.
இலவந்திகை
- இயந்திர வாவி ; 2"நிறைக்குறி
னிறைந்து
போக்குறிற் போகும், பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை," என்பது காண்க,
3"இலவந்திகை-நீராவியைச்
சூழ்ந்த வயந்தச் சோலை ; அஃது அரசனும் உரிமையுமாடும் காவற்சோலை," என்பர்
அடியார்க்கு நல்லார் உழையோர்-உரிமை மகளிர் ; காவலாளருமாம். உழையோர்
ஆங்குளர் என்றது அதன்கட் போகலாகாது என்றபடியாம்.
|
47-52. |
விண்ணவர் கோமான்
விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர்
விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு
வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள
பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் -பெருமை பொருந்திய வாடாத
பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று
- கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று, |
1
சிலப். 15, 157-8.
2
பெருங். 1. 40 : 311-2.
3
சிலப். 10 : 30-1.
|
|