உருகெழுமீது ஊர் மீயான் நடுங்க -
அச்சம் பொருந்திய மேலிடத்தின் ஊர்ந்திருக்கின்ற மாலுமி நடுங்க, நடுவுநின்று
ஓங்கிய கூம்பு முதல் முறிய - நடுவில் நின்று ஓங்கிய பாய்மரம் அடியிலே முறிய,
வீங்குபிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய - இறுகின பிணிப்பு அவிழ்ந்து பாய்
கட்டின கயிறு அறுபட, வயிறு பாழ்பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்ப - அப்பொழுது
நடுவிடம் பாழாகிப் பாய் பீறுண்டு ஒலிப்ப, திரைபொரு முந்நீர் இயங்கு திசை
அறியாது - அலைகள் பொருகின்ற கடலின்கண் செல்லுந் திசை அறியாமல், யாங்கணும்
ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல - எவ்விடத்தும் ஓடி மயங்குகின்ற கடுங்காற்றினாலலைக்கப்
பட்ட மரக்கலம் போல ;
மூதூர் என்னும் பாடத்திற்குப் புகாரின்கண் என்றுரைக்க,
மீயான் - மாலுமி
; நீயான் என்பதும் பாடம். நடுங்க முறியப் பரிய ஆர்ப்ப ஓடியென்க : ஓடி மயங்கு
வங்கம் என்றியைக்க ; மயங்குகால் - சுழல் காற்று எனலுமாம் ; இதற்கு, சுழல்
காற்றினால் எடுக்கப்பட்டு ஓடிய வங்கம்போல எனப்பிரித்துக் கூட்டுக.
35--44.
காழோர் கையற
- குத்துக்கோற்காரர் செயலற, மேலோர் இன்றி - பாகரும் இன்றி, பாகின் பிளவையிற்
பணைமுகம் துடைத்து - பாகனாற் குத்தப்பட்ட பிளவையினையுடைய பரிய முகத்தைக்
கையாற்றுடைத்து, கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும்
பெருங்கலக்குறுத்து - அரசர் பெருந்தெருவையும் கொடி யணிந்த தேரோடும் வீதியையும்
கடை வீதியையும் பெரிய கலக்க முண்டாக்கி, இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற்
படாது ஒருவழித் தங்காது-இருவகைப் பெயரினையுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தைத்
தரும் மூதூரின் கண் ஒரு நெறிப்படாமல் ஓரிடத்திற் றங்காமல், பாகும் பறையும்
பருந்தின் பந்தரும் - பாகனும் பறையடிப்போரும் பருந்தின் தொகுதியும், ஆதுல
மாக்களும் அலவுற்று விளிப்ப - மிக்க வறுமை யுடையோரும் சுழன்று கூப்பிட, நீல
மால்வரை நிலனொடு படர்ந் தெனக் காலவேகம் களிமயக்கு உற்றென - பெரிய நீல
மலை நிலத்தின் கண் திரிவதுபோலக் காலவேகம் என்னும் பட்டத்தியானை மத மயக்குற்றுத்
திரிந்ததாக ;