மாதர் தன்னொடு
மயங்கினை இருந்தோய் யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் - மாதினோடும் மயக்கமுற்
றிருப்போய் நீ அடைந்த துன்பம் யாது என வினவுதலும், ஆங்கதுகேட்டு வீங்கிள
முலையொடு பாங்கிற்சென்று தான் தொழுது ஏத்தி-அதனைக் கேட்டு அக் காரிகையுடன்
அவன் பக்கலிற் சென்று வணங்கித் துதித்து, மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன்
அவிழும் மலர்மாலையினை யுடைய அரச குமரனுக்கு, எட்டி குமரன் எய்தியது உரைப்போன்
- தான் உற்ற துன்பத்தின் காரணத்தைக் கூறுகின்ற எட்டி குமரன்;
மயங்கினை: எச்சமுற்று. மயங்கி மாதர் தன்னொடும்
இருந்தோய் என்க.
பாங்கில் - முறைமையால் என்றுமாம்.
65--71.
வகைவரிச் செப்பினுள்
வைகிய மலர்போல் - திறப்பட அமைந்த செப்பின் உள்ளே வைக்கப்பட்ட நறுமலரைப்போல,
தகை நலம் வாடி - மிக்க அழகு வாட்டமுற்று, மலர்வனம் புகூஉம் - பூம்பொழிலுக்குச்
செல்லும், மாதவி பயந்த மணி