பக்கம் எண் :

பக்கம் எண் :58

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 
  மேகலையொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற - மாதவி பெற்ற மணிமேகலையைக் கண்டதும் கோவலன் அடைந்த கொடிய துன்பம் நினைவில் வர அஃது, நெஞ்சு இறைகொண்ட நீர்மையை நீக்கி - மனம் தங்குதல் கொண்ட தன்மையை நீக்கி, வெம்பகை நரம்பின் என் கைச் செலுத்தியது - கொடிய பகை நரம்பின்கண் என் கையைச் செலுத்தியது - இது யான் உற்ற இடும்பை என்றலும் இதுவே யான் அடைந்த துன்பம் என்னலும் ;

செப்பினுள் வைகிய மலர் புழுக்கத்தால் வாடும்; 1"மடைமாண்
 
செப்பிற்றமிய வைகிய, பெய்யாப் பூவின் மெய் சாயினளே," 2"வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்," 3"வேயாது செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தீயோடி சிற்றம் பலமனையாள்," என்பன காண்க. மணிமேகலையைக் கண்டவுடன் கோவலனுற்ற துன்பம் நினைவிற்கு வந்தமையின், ‘மணிமேகலையொடு...துயர்தோன்ற,'' என்றான் இறைகொண்ட-யாழிலே தங்கிய. பகை நரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவது நரம்பு;ஆறாவதும் மூன்றாவதுமாகிய நரம்புகள் என்று முரைப்பர் ; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்று பெற நிற்பது கூடமாகும்," என்பது காண்க. கோவலன் தன் குலத்தோன்றலாகலின் அவனுற்ற துயரை நினைந்து மயங்கினேனென்றானென்க.

72--7. மதுமலர்த் தாரோன் மனமகிழ்வு எய்தி-தேன் பொருந்திய மலர் மாலையினையுடைய உதயகுமரன் உளமகிழ்ச்சி யடைந்து, ஆங்கவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி - அம் மணிமேகலையை என் அழகிய தேரின்மீதேற்றி, ஈண்டு யான் வருவேன் என்று அவற்கு உரைத்தாங்கு-ஈண்டு யான் வருவேன என்று எட்டி குமரற்குக்கூறி, ஓடு மழை கிழியும் மதியம்போல - ஓடுகின்ற முகில் கிழிதற்குக் காரணமாகிய மதியம்போல, மாடவீதியில் மணித்தேர் கடைஇ - மாடங்ளையுடைய வீதியின்கண் அழகிய தேரைச் செலுத்தி, கார் அணி பூம்பொழிற் கடைமுகம் குறுக - வானளாவிய பூஞ்சோலையின் வாயிலினிடம் அடைய;

முனிவர் உறைவிடத்தினீங்கி மலர்வனமடைந்த மணிமேகலையை
 
இனி எளிதினெய்தலாமென மனமகிழ்தானென்க. மாடங்கட்கு மழையும் தேருக்கு மதியமும் உவமை; மதியினை உதயகுமரனுக்கு உவமை யாக்கலுமாம் . கலை நிரம்பினமையின்; இதற்கு மதியம்போலக் குறுக வென்றியைக்க. கார் அணி - மேகத்தை மீது அணிந்த.

77--85. அத் தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் - அந்தத் தேர் ஒலியானது மணிமேகலையின் செவியிடம் சென்று இசைத்தலும் சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்என-உதயகுமரன் என்பால் வைத்த மனமுடையான்


1 குறுந். 1.       2 கலி. 68: 15.       3 திருச். 376.