4
பளிக்கறை புக்க காதை
|
|
என்று சித்திராபதியினிடமாக அறிந்து, வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த
மாற்றம் கேட்டேன் ஆதலின் - வயந்தமாலை மாதவிபால் ஒருநாள் கூறிய மொழியைக்
கேட்டிருக்கின்றேனாகலின், ஆங்கவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்கு என் செவிமுதல்
இசைத்தது-சுதமதி அவ் வுதயகுமரனது தேரோசையே போலும் இப்பொழுது என் செவியிடம்
ஒலித்தது, என் செய்கு என அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் - இதற்கு என்
செய்வேன் என அமுதினுமினிய மொழியினையுடைய மணிமேகலை கூறுதலும்;
சித்திராபதியோடு உற்று எனக் கூட்டிச் சித்திராபதியால் அறிந்து
|
என்றுரைக்க; வயந்தமாலை
சித்திராபதியுடன் அடைந்து என்றலுமாம். ஆயிழை: விளி.
|
89--90 |
சுதமதி கேட்டுத்
துளக்குறு மயில்போல் - சுதமதி அது கேட்டுத் தளர்ச்சியுற்ற மயிலைப்போல, பளிக்கறை
மண்டபம் பாவையைப் புகுக என்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ள கத்து இரீஇ-மணிமேகலையைப்
பளிக்கறை மண்டபத்தின் உள்ளிடத்தே புகுக என்று கூறி ஒளித்து இருத்தி அறையின்தாழைக்
கோத்து, ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழைதன்னை
- அப்பளிக்கு மண்டபத்திற்கு ஐந்து விற்கிடை தூரத்தில் நீங்காமல் நின்ற
சுதமதியை;
ஒளித்து அறை-ஒளியையுடையதாகிய அறையென்றுமாம். பணி |
யாளர் ஐந்துவிற்கிடை
தூரத்தே நிற்றல் மரபு;
1"ஐவிலினகல
நின்றாங் கடிதொழு சிறைஞ்சினாற்கு," என்பது காண்க. நீங்காது நின்றனள்; அங்ஙனம்
நின்ற நேரிழையை என அறுத்துரைத்து, நேரிழையைக் கண்டு என ஒரு சொல் விரித்துரைக்க.
|
91--6. |
கல்லென் தானையொடு
கடுந்தேர் நிறுத்தி - ஒலியினையுடைய சேனையொடு விரைந்த செலவினையுடைய தேரையும்
நிறுத்தி, பன்மலர்ப் பூம்பொயில் பகல் முளைத்ததுபோல்-பல மலர்களையுடைய பூஞ்சோலையில்
ஞாயிறு தோன்றியதுபோல, பூமரச்சோலையும் புடையும் பொங்கரும் - பூம்பொழிலிலும்
பக்கலிலும் கட்டுமலைகளிலும், தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங்குமரன்
- தாமரை மலர் போன்ற சிவந்த கண்களால் நோக்கிவருகின்ற மன்னிளம் புதல்வன்,
ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் - யாருமில்லாத
ஒரு பக்கத்தில் நீ ஒருத்தியாய் நிற்கின்றாய் நின் இயல்பினை அறிந்தேன்
;
பொங்கர் - ஈண்டுச் செய்குன்று. அரசிளங்குமரன் சுதமதியைக |
கண்டு உன் திறம் அறிந்தேன் என்று கூறியென்க.
1
சீவக. 1704.
|
|