கடாத்திறம் அடக்கிவருவோனாகிய
உதயகுமரன் எட்டிக்குமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன்
இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம்
குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ
நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள்
வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல்
அவனுள்ளஞ் சேராமுன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க
பளிக்கறை
புக்க காதை முற்றிற்று.
1
நாலடி. 42.
2
இறை சூ. 1. உரை.
3
சீவக. 192,
|