|
110
115
120
125
130
135
140
|
புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நன்னீ ரகழிப்
புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி
ஞாயி லிஞ்சி நகைமணி மேகலை
வாயின்மருங் கியன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை
ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி
ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய
ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி
குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும்
குடதிசை மருங்கிற் கென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
அன்றிற் பேடை அரிக்குர லழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி யந்தனர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள
அமரக மருங்கிற் கணவனை யிழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்.
|