மருங்குபற்றியதாகவோ இருக்கலாம். பரிதி (வட்டமானது) என்பது முழுதுந் தழுவியது.
வாழை (வழவழப்பானது) என்பது ஒரு மருங்கு (அடிமரம்) பற்றியது, வாழையினுஞ் சிறப்பாகத் தொடர்ந்து
வாழ்வது மூங்கிலாதலால், வாழ்வது வாழை என்பது பொருந்தாது.
பல குணங்கள் பல பொருட்கும் பொதுவாயிருத்தலின்,
சிறப்பியல்பென்றது, பெரும்பாலும் ஒரு சார் பொருள்கட்குச் சிறப்பாயிருப்பதே.
|
எ-டு
:
|
வள்ளம்,
வள்ளி, வளை, வளையம், வளையல்,
வண்டு,வண்டி,
|
|
|
வணர், வணக்கம், வட்டு, வட்டி, வட்டில், வட்டை. இவையெல்லாம் வளைந்தது
அல்லது வளையமாயிருப்பது என்னும் பொருள் கொண்டவையே.
|
குணம்
என்பது தொழிலையும் தழுவும்.
எ-டு : கேழல்
(நிலத்தை கிளைப்பது)
ஒப்புமையும் ஒரு குணமே.
எ-டு : நுணா (நுணல் போலுங்காயையுடையது).
ஒரு சொல்லான் பல கருத்துகள் எழுப்பப்
பெறலாம். அவற்றின் முன்மை பின்மைத் தொடர்பு
அறியப்பட்ட பின்னரே, மொழிப்பொருட் காரணம் துணியப்பெறல்வேண்டும். சிலவிடத்துப் பல
காரணங்கள் ஒத்த பொருத்தமுடையனவாகத் தோன்றும். அவற்றுள் மிகப் பொருத்தமானதை ஏரண முறையிலும்
ஒப்பு நோக்கியுமே துணிதல் கூடும்.
|
எ-டு
:
|
விழா
என்னுஞ் சொற்கு விழுத்தல், விழைதல்
என்னும்
இரண்டும்
பொருட்
|
|
|
காரணமாகத்
தோன்றலாம். விழுத்தல் சிறத்தல், விழைதல் விரும்புதல், விரும்பிச் செய்வது என்னுங்
காரணத்தினும் சிறப்புச் செய்வது என்னுங் காரணமேபொருத்தமாம்."சிறப்பொடு பூசனை"
என்று வள்ளுவர் கூறியிருப்பதாலும் "சிறப்புச்செய்தல்"என்னும் வழக்குண்மையாலும்
பின்னதன் மிகுபொருத்தம் அறியப்படும். விழு - விழா, வேள்வியே விரும்பிச்
செய்யப்படுவது. வேள்வியொடு செய்யப்படும் விழாக்கள், ஆகுபெயர் முறையில்
வேள்வியெனப்பெறும்.
|
இனி சொற்றிரிவுமுறைகளையும்
முற்பட அறிந்துகொள்ளல் வேண்டும். எ-டு : இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும்
என்னும் திரிவு முறையால், அகல் -ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்), வணங்கு
- வாங்கு முதலியனவும்; டகரம், ரகரமாகத் திரியும் என்னும் திரிவு
முறையால், படவர் - பரவர், விடிச்சி - விரிச்சி
(மறைபொருளை வெளிப்படுத்தலான பாக்கத்து விரிச்சி) முதலியனவும், ழகரம்
டகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், புழல் - புடல்
(புழலை - புடலை), குழல் - குடல் முதலியனவும்; ''இல்'' ஈறு ஒரு குறுமைப்
|