காளம் - காளி. கள் = கருப்பு. கோடிய மதில், கோட்டம்.
கோடுதல் = கோணுதல் அல்லது வளைதல்.
|
கோழிக்கோடு
> Calico
> கலிக்கா.
காளிக்கோட்டம் > Calcutta
> கல்கத்தா.
|
|
திரு என்பது ஸ்ரீ என்று
திரியவே, திருமான் என்பதை ஸ்ரீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை ஸ்ரீமாட்டி, சீமாட்டி
என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒ.நோ: பெருமகன் - பெருமான். பெருமானுக்குப் பெண்பால்
பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியாகும். ஸ்ரீ என்பது திரு என்பதன்
திரிபே யாதலால், ஸ்ரீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தனித்தமிழில் எழுதப்படும்.
|
வடமொழி வடிவம். |
|
தென்மொழி வடிவம் |
|
ஸ்ரீ் |
|
திரு |
|
மகா ராஜ ராஜ ஸ்ரீ |
} |
மா அரச அரசத்திரு |
ம. - - ஸ்ரீ |
பேர் அரசு அரசத்திரு |
|
ஸ்ரீலஸ்ரீ |
|
திருவத்திரு |
|
|
|
|
திருப்பெருந்திரு |
|
சீகாழி |
|
திருக்காழி |
|
சீகாளத்தி |
|
திருக்காளத்தி. |
திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார்
முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும்,
St. (Saint)
என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதாயிருப்பதால்,
அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர் திருவாட்டியார் என்ற அடைகளையே முறையே
ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும். திருவாளன்மார் திருவாட்டிமார் என்பன பலர்பால்
அடைகள்.
சீகாழியைச் சீர்காழியென்று வழங்குவது சரியாய்த் தோன்றவில்லை.
சிறு தனம் என்பது ஸ்ரீ தனம் எனத் தவறாய் வழங்குகிறது.
இதுகாறுங் கூறியவற்றால், திரு என்பது தென்சொல்லே யென்றும்
அதன் திரிபே ஸ்ரீ யென்றும் தெரிந்துகொள்க.
|
-
The
Putturian, Vol. VIII, Feb 1942
|
|