''உள்'' அடியின் பின்னைத்
திரிபு
உள் - இள். இண் - இணர், இணங்கு, இணை.
இள் - (இய்) - இயை - இசை
இள் - இழை
இய் - எய் - ஏய்.
ளகர மெய்யீறு பல சொற்களில் யகரமெய்
யீறாகத் திரியும்.
|
எ-டு
:
|
தொள்
- தொய். பொள் - பொய். வள் - வய் - வை = கூர்மை
|
|
|
இழைதல்
= உராய்தல், உளம் பொருந்துதல், ஒன்றிப் பழகுதல் எய்தல் = ஒத்தல் "தேனெய் மார்பகம்"
(சீவக 2382)
|
உகரச்
சொல், முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக் கருத்திலும் வகரமெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே,
ஒப்புமைக் கருத்திலும் பெறும்
|
உவ், உவக்காண், உவை - முன்மைச்சுட்டு.
உவ்வி (தலை) உவ, உவண், உவணை - உயர்ச்சிக் கருத்து
(உவ்) - உவ - (உவர்) - இவர்
- ஒப்புமைக் கருத்து. இவர்தல் = ஒத்தல்.
உவமை என்னுஞ் சொல் ஒப்புமைக்
கருத்துள்ள ''உவ'' என்னும் முதனிலையினின்று பிறந்ததாகும். உவத்தல் என்னும் தொழிற்பெயர்க்கு
விரும்புதல், பிரியமாதல், மகிழ்தல் என்னும் பொருள்களும் உவகை என்னும் தொழிற்பெயர்க்கு
அன்பு, காமம், இன்பச் சுவை (சிருங்கார ரசம்) மகிழ்ச்சி என்னும் பொருள்களும், உவப்பு என்னும்
தொழிற்பெயர்க்கு விருப்பம், மகிழ்ச்சி, பொலிவு, என்னும் பொருள்களும். பல்கலைக்கழக
அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. மனம் ஒத்திராவிட்டால், விருப்பமும் அன்பும் காமமும் இன்பமும்
மகிழ்ச்சியும் எங்ஙனம் நிகழும்? இவற்றிற்கெல்லாம் அடிப்படை உளம் ஒத்தல் அன்றோ!
''உவகை'' உவப்பு முதலிய சொற்கள் போன்றே உவமை என்பதும்
ஒரு தொழிற்பெயராகும். ''உவ'' பகுதி ''மை'' விகுதி. ஒ.நோ. : இள + மை = இளமை பொறு + மை
= பொறுமை. இளத்தல் = மென்மையாதல்.
ஒரு வினைப்பகுதி பல விகுதிகளை யேற்றுப் பல தொழிற்பெயர்களை
ஆக்குதல் இயல்பாதலால், ''உவ'' என்னும் பகுதி ''தல்'', ''கை'', ''பு'' ''உ'', ''மை'', ''மம்'', ''மானம்''
என்னும் பல விகுதிகளை யேற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு. உவவு, உவமை, உவமம், உவமானம்,
என்னும் பல தொழிற் பெயர்களைத் தோற்றுவிக்கும். இவற்றுள் முதல் நான்கும், உவமைப் பொருள்
இழந்துவிட்டன, அல்லது அவற்றை அப் பொருளில் ஆளும் இலக்கியப் பகுதிகள் இறந்துபட்டன.
|