உவ - உவர் - இவர். இவர்தல் = உயர்தல்,
ஏறுதல்
உவ - உவப்பு = உயரம், உவ - உக - உகப்பு = உயர்வு
உவ - உவண் = மேலிடம். உவண் - உவணை = தேவருலகம்.
"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
என்று தொல்காப்பியங் கூறுவதால் (1224) உயர்ந்த பொருளை
ஒப்பாகக் கொள்வதே உவமையின் அடிப்படை நெறிமுறை என்று கொண்டு உவமைச் சொல்லிற்கு உயர்வுப்பொருள்
கொள்வது பொருந்தாது. தொல்காப்பியம் உயர்ந்தது என்று குறித்தது ''சிறந்தது'' என்னும் பொருளது.
சிறப்பு, உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பு என இரு திறப்படும். உயர்ந்த பொருளுக்கு மிகவுயர்ந்த
பொருளையும் இழிந்த பொருளுக்கு மிக இழிந்த பொருளையும் உவமங்கூற வேண்டும் என்பதே தொல்காப்பியர்
கருத்து.
எ-டு :
|
ஊரங்
கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்
|
|
கங்கையாற்றிலும் சாக்கடை கலந்து கங்கை நீராம் என்னும்
எடுத்துக் காட்டுவமையில் மேலோர்க்குக் கங்கையும் கீழோர்க்குச் சாக்கடையும் உவமமாதல் காண்க.
வேற்றுமை குறிக்கும் சொல் வேற்றுமை என்றே பெயர் பெற்றாற்போல் ஒப்புமைபற்றிய அணியும் ஒப்புமை
குறிக்கும் சொல்லாலேயே அழைக்கப்பெறுதலே முறைமையாம்.
வடமொழியில் "உபமா" உபமான என்னும் இரு வடிவுகளே உள. இவை
முறையே, உவமை, உவமானம், என்பவற்றின் திரிபுகள், உவமம், உவமன், உவமி, உவமானி என்னும்
வடிவுகளும் சொற்களும் வடமொழியிலில்லை. அறியுங்கருவி அல்லது அளவைப் பெயர் ''ஆன'' என்று இறின்,
அதனால் அறியப்படும் பொருளின் பெயர் ''ஏய'' என்று இறுவது வடமொழி மரபு.
|
எ-டு
:
|
ஞான(ம்)
- ஞேய(ம்)
|
|
|
அனுமான(ம்)
- அனுமேய(ம்)
பிரமாண(ம்) - பிரமேய(ம்)
|
இம் முறைப்படி உபமானத்தினால் அறியப்படுவது உபமேய(ம்) என்றாயிற்று.
இது பிற்கால வளர்ச்சி. மானம் என்பது தனிநிலையில் அளவு என்று பொருள்படும் தூய தென்சொல்.
படியை இன்றும் மானம் என்பர் வடார்க்காட்டார்.
ஆரியர் நாவலம்பொழிற்கு வருமுன்னரே. தமிழிலக்கணம் தென்மதுரையில்
முழுவளர்ச்சி யடைந்துவிட்டதென்றும் தொல்காப்பியம் கி. மு. 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டதேனும் அதில் கூறப்பட்டுள்ள இலக்கணம் (வடசொல் நீங்கலாகத்) தலைக்கழகக் காலத்தது
என்றும் அதில் ஆளப்பெற்றுள்ள குறியீடுகள் எல்லாம் தென்சொல்லே என்றும் |